Tuesday 23 August 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

படித்ததில் பிடித்தது!!
*பெண்மை போற்றுவோம்*
வாங்கடி
என் கள்ளிக்காட்டு பாட்டிகளே
வீட்டில் பெண்பிறந்தால்
தரித்திரமென்று
சரித்திரத்தை நசுக்கிய
நயவஞ்சகிகளே
அதரத்து பால் புகட்டாது
அரக்கிகளாகி
கள்ளிப்பாலில்
பெண் பெருமை உணராது
சிசுவழித்த சிறுக்கிகளே
முறுக்கிய மீசையிருந்தும்
பெண்ணென்றால் வேண்டாமென
தர்க்கம் செய்து தடைபோட்ட ஆணவ ஆண்மகன்களே
பிஞ்சின் வாய்க்கு
நெல்மணியால் வாய்க்கரிசி போட்ட
உத்தம சீலர்களே
பின்புத்தி
பிள்ளை பெறும் எந்திரம்
சமையல்கட்டே நிரந்தரம்
என பெண்களின்
முன்னேற்றத்தை
மூளியாக்கியவர்களே
இட ஒதுக்கீட்டை கூட
சமமாய் வழங்க
மனம் வராத மகாத்மாக்களே
இப்படி
உங்களின் விதவிதமான
தடைகளைத் தாண்டி தான்
மென்மலராய்
பூக்கிறாள் பெண்
நடக்க தொடங்கிய நாளிலிருந்தே
ரணங்களை ஏதோ ஓர் வடிவில் சுமந்து
காம விழிகளை கடந்து
காதல் தொல்லைகளை கடந்து
அப்பன்
அண்ணன்
தம்பி
கணவன் என
யாவரின் கட்டளைக்கு
பணிந்து
பயணிக்கிறாள் பெண்
ஏன்
நீங்கள்
திட்டுகிற முதல் வார்த்தை கூட
அவளை
அவள் கற்பை அசிங்கப்படுத்தி தானே
அரங்கேற்றுகின்றனர்
தட்டுங்கள்
பலமாய் கை தட்டுங்கள்
130 கோடி மக்களின்
ஒலிம்பிக் ஏக்கத்தை
வெண்கல வெள்ளியுமாய்
ஆரவாரத்தோடு
தணித்த தாரகைகளை
தலைவணங்குங்கள்
இது
சாதாரண வெற்றியல்ல
சதா ரணப்படுகிற
மங்கைகளில் இருந்து
ஒருத்தியின்
சாதனை வெற்றி
ஆண்களே
இனியேனும்
பெண்களை போற்றுங்கள்
எல்லா நிலையிலும்
இன்பம் தரும் அற்புத ஆத்மாக்கள் பெண்கள்
இனி
பெண்பிறந்தால் முகம் வாடாது
வாரிசென உச்சி முகருங்கள்
எதிர்காலத்தில்
ஒருவேளை
*சாக்‌ஷியாகவோ*
*சிந்துவாகவோ*
அவள்
இருக்கலாம்!
😉😍👰💃👭💁🙅👍🙏💖
நன்றி மனோகரன்

No comments:

Post a Comment