Monday 22 August 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அழியும் தமிழகம்- பேரதிர்ச்சியான செய்தி
*OrganicVillage 9884122255*
‪#‎அம்மாஆரோக்கியதிட்டம்‬ என்ற பெயரில் 30 வயதுக்கு மேற்பட்ட 3.6 கோடி தமிழர்களுக்கு இலவச உடல்பரிசோதனை செய்யபட்டதில் பேரதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
50% தமிழர்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது
75% ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது
56% பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது
57% தமிழ்பெண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்
54% தமிழ் ஆண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்
அதாவது சம்பாதிக்கும் வயதில் உள்ளவர்களில் இருவரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதியும், ஆண்களில் 75% பேருக்கு ரத்தகொதிப்பு வியாதியும் இருந்தால் அந்த இனத்தின் நிலை என்ன ஆகும்?
கொடுமையிலும் கொடுமையாக இதற்கு தீர்வாக உயர்கொழுப்பு பொருட்கள் மேல் வரிவிதிக்கலாம் என அரசுக்கு பரிந்துரை சென்றுள்ளது..எந்த சுவற்றில் தலையை முட்டிகொள்வது என தெரியவில்லை. நாட்டின் எதிர்காலத்தை யோசிக்கவே அச்சமாக உள்ளது.
இயற்கை உணவு மற்றும் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தி...வரும்முன் வந்த பின்னும் காப்போமென்ற எச்சரிக்கையுடன் இல்லையெனில் வெகுவிரைவில் இளவயது மரணங்களும், மாரடைப்புகளும் பெருகிவிடும்.
இதனை கடைபிடியுங்கள்...
(விழிப்புணர்வுடன் செயல்படவும்...)
*பசியெடுத்தால் மட்டும் உண்ணவும்*
*உண்ணும்போது உணவை மட்டுமே உண்ணவும்( சமைக்காத உணவு மிக நல்லது உதாரணம் - தேங்காய்,வாழைப்பழம்)*
*தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்தவும்*
*சிறுநீரை அடக்காதீர்*
*மலம் வந்தால் அடக்காதீர்*
*நன்றாக துங்கவும்*
*(மீண்டும்)பசியெடுக்க நன்றாக உழைக்கவும்*
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
நன்றி பாஸ்கர்

No comments:

Post a Comment