Friday 2 August 2019

'கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி வாசலை அடையலாம்..

''கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி வாசலை அடையலாம்.....
.......................................
வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது,நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்
வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது.அப்படிக்
கிடைத்தால் கிடைத்த வாய்ப்பை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
வாய்ப்பு கிடைக்கும் போது அதனை யார் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்..
கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவன், மனிதனிடம் வந்து போகும் சந்தர்ப்பத்தைப் பின் வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான்.
அது தான் சந்தர்ப்பம் (opportunity) என்னும் சிலை.
அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
சந்தர்ப்ப சிலையிடம் சில கேள்விகள் ...
உனக்கு இறக்கை எதற்கு..?நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக!
முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?
மக்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொளவதற்காக!
ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?
சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தாதோரிடமிருந்து
கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!
பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது..?.
சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக!
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்கள்.
இதன் மூலம் நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.
ஒரு முறை சந்தர்ப்பம் நழுவி விட்டால் அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்..?
ஆம்,நண்பர்களே.,
இன்றைக்கு கையில் கிடைக்கும் வாய்ப்புகளை
தவற விட்டுவிட்டு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக் காத்திருப்பதை விட
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்வதே அறிவுடைமையாகும். அதுவே வெற்றியைத் தரும்.

No comments:

Post a Comment