Saturday 24 June 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கண்ணதாசன்-காலங்களில் அவன் வசந்தம்
கண்ணதாசன்
தமிழ் அன்னையின்
ஆண் வடிவம்
இன விடுதலையை
பாடியவன் பாரதிதாசன்
மன விடுதலையை
பாடியவன் கண்ணதாசன்
திரையிசைச்சித்தன்
பாடல்கள் மூலம்
தத்துவங்களை போதித்த
தமிழ்ப்புத்தன்
நாம் காற்றை சுவாசித்து
உயிர் வாழ்கிறோம்
காற்று கண்ணதாசனின்
கவிதைளை சுவாசித்து
உயிர் வாழ்கிறது
நீ
வார்த்தைகளிலிருந்து
கவிதை படைக்கவில்லை
வாழ்க்கையிலிருந்து
கவிதை படைத்தவன்
நீ
கவிமருத்துவன்
மக்களின் மனநோய்க்கு
உன் பாடல்களே மருந்து
உன்
கவிதைகளுக்கு
வாசனையுண்டு
பாதிமண்வாசனை
மீதி பெண் வாசனை
காலதேவனின் கண்கள்
உன்
கவிதைகள்
(கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில்
வாசித்த கவிதை)

No comments:

Post a Comment