Monday 26 June 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எனக்கு வயிறு எரிகின்றது.
தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தமிழில் தவறில்லாமல் எழுதத் தெரியும். இலக்கணம் தெரியுமா. இலக்கியம் தெரியுமா. ஐம்பெரும் காப்பியங்களின் பெயராவது தெரியுமா. .குறைந்தது 20 திருக்குறள் தெரியுமா. .தமிழைப் பற்றி என்ன தெரியும்.
நாளை ஏழரைக் கோடிப் பேருக்கும் மும்பையில் வேலை என்றால் ஓடி விடுவார்கள். வயிறு பற்றி எரிகிறது. ஒன்றுமே தெரியாமல் தமிழ் தமிழ் என்று கூவிக் கொண்டு. என்னால் ஒரு 2000 வட இந்தியர்கள் தமிழ் கற்றிருக்கின்றார்கள். நன்றாகப் பேசுவார்கள்.
கோவில்களைப் பற்றித் தெரியுமா. அவற்றின் ரகசியங்கள் தெரியுமா. மொழிப் பற்று இருக்கிறதா.
அதெல்லாம் விடுங்கள். தமிழில் 10 செய்யுள் மனப் பாடமாகத் தெரியுமா.
உண்மை நிலை தமிழ்நாட்டில் தமிழ் வாத்தியாருக்கு மதிப்பே இல்லை. திரைப்படங்களில் அவரைக் கேலி செய்கின்றார்கள். .
தமிழை வளருங்கள். அழிக்காதீர்கள்.

No comments:

Post a Comment