Monday 18 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
அற்புதமான ஆன்மீகப் பேச்சாளர் திரு. சுகி. சிவம் அவர்கள் கூறிய கருத்து ஒன்றை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
படித்துப் பாருங்கள் :
வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?
காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம்.
ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!
உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!
பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...
நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம்
பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.
சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.
கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.
துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன.
எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment