Wednesday 29 June 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌴அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
🌴ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
🌴இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
🌴மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
🌴முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
🌴கோபமடைந்த ஆசிரியை கேட்டபோது சொன்னாள்.
🌴நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
🌴வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
🌴குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று.
🌴அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை கண்களில் நீர்ததும்ப சொன்னார்,
🌴“அன்பு என்றால் இதுதான்”.
🌴உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்.
🌴ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது.🙏

No comments:

Post a Comment