நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் பட்டப்பகலில் அத்தனை பேருக்கு மத்தியில் ஒருவன் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டி சாய்க்கிறான் என்றால் இதை என்ன சொல்வது?இந்த அளவுக்கு நம்மவர்கள் கொடூரமாகி விட்டார்கள் என்று சொல்வதா?இதை பார்த்த ஒருவர் கூட தப்பி ஓடிய அவனை பிடிக்கமுயலவில்லை.வேடிக்கை தான் பார்த்து இருக்கிறார்கள்.ஒரு பெண்ணின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?இது நடந்த அதேநாளில் வெளியான இன்னொரு செய்தி திருமணமாகி 3பெண்களுக்கு தாயான பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒருவன் 4பேரையும் பெண்டாள நினைத்து அது முடியாமல்போனபோது அவர்களை கொலை செய்கிறான்.ஏன் இப்படி ?நாம் ஏன் இந்த அளவுக்கு நெஞ்சில் ஈரமில்லாதவர்களாகிப்போனோம்.நமது வளர்ப்பிலும்,சமூக கட்டமைப்பிலும் எங்கோ தவறு உள்ளது.அதை கண்டறிந்து களைய நமது சமூகவிஞ்ஞானிகள் முன்வரவேண்டும்.நமது பள்ளிப்படிப்பில் நீதி வகுப்பை ரத்து செய்தது தவறு.அதை திரும்ப கொண்டு வரவேண்டும்.அதே போல இலக்கிய வகுப்பையும் அறிமுகப்படுத்தவேண்டும்.இலக்கியம் மனித மனங்களை மென்மையாக்கும்.
No comments:
Post a Comment