Tuesday 28 June 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நிதர்சனமான உண்மை .
தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,
”என்னை பலரும் அவமானப்படுத்துகிறார்கள் நான் என்ன செய்வது?’
குரு சொன்னார், *அவற்றைப் பொருட் படுத்தாதீர்கள்*
“என்னால் முடியவில்லையே”!
அப்படியானால் *அவற்றைக் கடந்து செல்லுங்கள்* “அதுவும் முடியவில்லையே!”
சரி! அப்படி யென்றால் *அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்*
“குருவே! அதுவும் முடியவில்லை!”
குரு சொன்னார்,
“அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை
என்றால் *அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர்* என்று அர்த்தம்

No comments:

Post a Comment