Thursday 28 July 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பத்து தடவை கீழே விழுந்தால்
ஆயிரம் தடவை எழுந்திரு . . .
ஐம்பது தடவை ஏமாந்துபோனால்
பத்தாயிரம் தடவை ஏமாறாமலிரு . . .
நூறு தடவை தோற்றுப்போனால்
லக்ஷம் தடவை ஜெயித்துவிடு . . .
ஆயிரம் தடவை அவமானப்பட்டால்
கோடி தடவை மரியாதையை அடைந்துவிடு . . .
கோடி தடவை பயந்துபோனால்
பலகோடி தடவை தைரியமாயிரு . . .
விடாதே . . .
உன்னை நீயே பலவீனமாக்காதே . . .
மறந்துவிடாதே . . .
உனக்குள் இருக்கும் சக்தியை
மறந்துவிடாதே . . .
தொலைத்துவிடாதே . . .
உன்னுள் புதைந்திருக்கும் திறமையை
தொலைத்துவிடாதே . . .
விட்டுக்கொடுக்காதே . . .
உன் முயற்சிகளை
விட்டுக்கொடுக்காதே . . .
நீ விழுந்ததைக்
கணக்குப் பண்ணாதே . . .
நீ எழுந்ததை மட்டுமே
நினைவில் வைத்திரு . . .
நீ தோற்றதை
எண்ணிப் புலம்பாதே . . .
நீ ஜெயித்ததை எண்ணி
இன்னும் ஜெயிக்கப்பார் . . .
நீ அவமானப்பட்டதை
நினைத்து அழாதே . . .
நீ பெருமையடைந்ததை
நினைத்து வென்றுகாட்டு . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை !
உன்னுடைய புலம்பலைக் கேட்டு
உனக்குச் சமாதானம் சொல்ல . . .
உன்னுடைய தோல்விகளில்
உனக்குத் தோள் கொடுக்க . . .
உன்னுடைய பலவீனங்களுக்காக
உனக்கு உதவி செய்ய . . .
யாருக்கும் இங்கே நேரமில்லை . . .
இது வெல்பவர்களின் உலகம் !
இது வெல்பவர்களுக்கான உலகம் !
இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை !
இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை !
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை !
உனக்கு உதவிக்கு யாரும் வேண்டாம் !
இந்த மனிதரை நம்பி நேரத்தை வீணாக்காதே !
நீயே விழுந்தாய் . . நீயே எழுந்திரு !
நீயே தோற்றாய் . . .நீயே வெல் !
நீயே அவமானப்பட்டாய் . . .நீயே மரியாதை அடை !
நீயேதான் எழ வேண்டும் . . .
உன்னை கைதூக்கி விட
இந்த உலகிற்கு நேரமில்லை . . .
நீயேதான் வெல்லவேண்டும் . . .
உனக்கு வழிசொல்லிக் கொடுக்க
இந்த உலகிற்கு பொறுமையில்லை . . .

No comments:

Post a Comment