மதுரை மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இரண்டுநாள் போட்டோஷாப் சிஎஸ்4 என்ற பயிலரங்கத்தினை அதன் புரவலர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் தொடங்கி வைத்துப் பேசினார். கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலரங்க நிர்வாக இயக்குநர் கணினிக் கம்பன் ஜெ.வீரநாதன் புதிய தொழில் நுட்ப கலையை பல்வேறு ஒளிப்படங்கள் மற்றும் செயல்முறை மூலம் கற்றுக் கொடுத்தார். மடோபா தலைவர் என்.ஜெயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.ராஜசேகரன் நன்றி கூறினார். 30 பேர் பயிலரங்கில் பங்கேற்றுப் பயன்பெற்றனர். நிர்வாகிகள் ஆர்.வேலுமணி, கே.ரவி, வி.சரவணக்குமார், கிருஷ்ணகுமார், ஜெ.சரவணன் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment